×

சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: இன்று ஒரே நாளில் வங்கி பொதுமேலாளர் உள்பட 24 பேர் பலி!

சென்னை: சென்னையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.

இந்நிலையில்  சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை இந்தியன் வங்கி பொதுமேலாளர் உள்பட 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில், ஸ்டாலின் மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai ,bank general secretary , Chennai, Corona, dies
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...