விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. நீர் பெருந்தகாரம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தி உள்ளது. மேலும் 75 வயது மூதாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.