×

கஞ்சா கடத்திய 3 பேர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்தனர். அந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை.  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் கூறியதால் போலீசார் அவர்களை சோழவரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், சென்னை வில்லிவாக்கம் ராசாத்தி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20),  சதீஷ்குமார் (18) மற்றும் ஆவடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kidnapping , 3 arrested ,cnnabis trafficking
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது