வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான சலுகைகள் மறுக்கப்படுவதால்,கடந்த 27 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று சிறைக்குள் உள்ள கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு அனுமதி கிடைத்ததால் உண்ணாவிரதத்தை முருகன் கைவிட்டார்.