×

கொரோனாவால் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: சென்னையில் தனியார் தொலைக்காட்சி செய்தி பிரிவில், ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  வேல்முருகன் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் நண்பர்கள், செய்திகளை சேகரிக்க செல்லும்போது, மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேல்முருகன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம்  வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது சொந்த நிதியில் இருந்து 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Tags : TV cinematographer family ,Corona ,CM ,TV cinematographer , Corona, TV cinematographer, CM Edappadi
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...