×

தமிழகத்தில் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

சென்னை சென்ட்ரல் - டெல்லி செல்லும் ராஜ்தானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



Tags : cancellation ,Southern Railway ,Corona , Southern Railway, Corona
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்