×

வேலூர் வாலாஜாவில் வெடிவிபத்து: 6 பேர் படுகாயமடைந்த நிலையில், தரைமட்டமான வீடு...!

வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், வீடு முற்றிலுமாக சிதறி தரைமட்டமானது. வேலூர் மாவட்டம் வாலாஜாவில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேட்டைக்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை தாங்களாகவே தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், தமிழன் என்பருடையே வீட்டில் 6 பேர் உறவினர்களுடன் கூடி, வேட்டைக்காக நாட்டுவெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் வெடிவிபத்தில் சிக்கி பலத்த காயமைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எஜமான், வேதவள்ளி, விஜய் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உழைப்பாளி என்பவர் மட்டும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வான்கன், பூரணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும், காவல் துறை தரப்பில், அவர்கள் நாட்டுவெடிகுண்டுதான் தயாரித்துள்ளனர். அப்போது தவறுதலாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Tags : Explosion ,Vellore Valaja , Vellore, Walaja, Explosives
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு