×

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது; பாரத் டெண்டர் திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சென்னை: பாரத் டெண்டர் திட்டம் தொர்பாக முதல்வர் உரிய ஏற்கத்தகுந்த விளக்கத்தை உடனே தர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு முகாந்திரம் இல்லை என கூறிய ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?. ஊழல் இல்லை என பச்சைப்பொய் சொன்ன அமைச்சர் ராஜினாமா செய்வாரா? டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? என ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கையில் கூறியதாவது; பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது.

பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக, உயர்நீதிமன்றத்தில் கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை; “ஊழலே நடக்கவில்லை என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. உதயகுமார் மற்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார் என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜிநாமா செய்வாரா? அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முகாந்திரம் இல்லை என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முதலமைச்சர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags : St George ,Delhi ,Bharat Tender Scheme Chennai ,Fort , St. George's Fort, Chennai, Bharat Tender Project, MK Stalin
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு