×

கொரோனாவில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்....! எத்தியோப்பியாவில் நெகிழ்ச்சி

எத்தியோப்பியா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 114 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அபா திலாகுன் வோல்ட்மைக்கேல் என்ற அந்த முதியவருக்குக் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலைநகர் அடீஸ் அபாபா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்கக்கப்பட்டார். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாகவே அவருக்கு சிகிச்சை அளிக்கத்தொடங்கி விட்டனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. ஒரு வார காலத்துக்கு மேலாக செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு தற்போது அவர் நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். இவர், 1935 இல் முசோலினி தலைமையில் ஆக்கிரமிக்கப்பட்ட எத்தியோப்பியவைப் பார்த்தவர், 1974 இல் ஹெய்ல் செலசியின் ஆட்சி அகற்றப்பட்டதைப் பார்த்தவர், 1987 இல் மார்க்சிய டெர்க் என்னும் சோசலிச இராணுவ ஆட்சி கவிழ்ந்ததைப் பார்த்தவர், தற்போது இந்த பெருந்தொற்று கொரோனாவையும் கண்டு மீண்டுவிட்டார்.

Tags : Ethiopia ,Old Man , Corona, Elderly, Ethiopia
× RELATED முதியவர் மீது தாக்குதல்