அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதி தொழிற்சாலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கார் மீது மோதியது. சரக்கு ரயில் மோதியதில் நாகிரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.