சென்னை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் எம்.எல்.ஏ. அரசு விரைவில் பூரண குணமடைந்து நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும் என ஸ்டாலின் கூறினார்.