திருவொற்றியூ: மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (38). இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மளிகை கடையை திறக்க சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் புவனேஸ்வரி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
இதேபோல், மர்ம நபர்கள் அதே பகுதியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோமதி என்ற பெண்ணிடம் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுபற்றி 2 பெண்களும் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.