×

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

செங்கல்பட்டு: காங்கிரஸ் கட்சி சார்பில், லடாக்  எல்லையில்  இறந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, செங்கல்பட்டில் நடந்தது. செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் லடாக்  எல்லையில்  இறந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் நேற்று  நடந்தது. செங்கல்பட்டு நகர காங்ரஸ் தலைவர் ஜெ.பாஸ்கர் தலைமை வகித்தார்.

மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். இதில் காங்ரஸ் மாவட்ட பொது செயலாளர் குமரவேல், மாவட்டசெயலாளர் முருகன், ரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Indian Army ,veteran ,Congress Party Congressman ,Anjali , Congressman, Indian Army veteran, Anjali
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...