×

இருளர் குடியிருப்பில் ஆழ்துளை கிணறு

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பு மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா சமீபத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்டோ வீடு கட்டி வருகின்றனர். இங்கு சாலை, தெரு மின்விளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்போரூரில் செயல்படும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இருளர் குடியிருப்புக்கு ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து தர முன் வந்தனர். இதற்காக, திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டி ஆகியவை அமைத்து தரப்பட்டது.

Tags : apartment ,Dillard , Dillard Residence, deep well
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...