×

மத்திய ஆசிரியர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் பெற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு மே மாதம் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த தகுதித் தேர்வு(சிடிஇடி) ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மேலும், இந்ததேர்வு நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகள் www.ctet.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். இந்த இணைய தளத்தில் தேர்வு மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


Tags : CBSE ,Central Teacher ,announcement , Central Editorial Work, Exam Postponement, CBSE
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...