திருச்சி : திருச்சியில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மும்கொம்பில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது.2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது. இந்நிலையில் புதிய கதவணை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.