திருச்சி : பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்களன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.