சென்னை : அண்ணா பல்கலை.யின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குடிசைப் பகுதிகளில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வீடு வீடாக சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சமீப நாட்களில் தென் சென்னை பகுதிகளில் தொற்று குறைவாக பதிவாகிறது என்றும் கூறினார்.