தூத்துக்குடி : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் ஆகிறது. சாட்சிகளிடம் நடத்திய விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார் கோவில்பட்டி நடுவர்மன்ற நீதிபதி. தந்தை, மகன் மரணம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. நடத்திய விசாரணையின் அறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.