×

ஜூலை 1 முதல் சர்வதேச விமான சேவை தொடங்க வாய்ப்பு: முதல் கட்டமாக அமெரிக்காவுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்

புதுடெல்லி: ஊரடங்கில் இருந்து விடுபடும் இரண்டாம் காலகட்டமான ஜூன் 30ம் தேதிக்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே சர்வேதேச விமான சேவை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதி ஜூன் 30க்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக டெல்லி-நியூயார்க், மும்பை-நியூயார்க் இடையேயான விமான சேவை துவக்கப்படலாம் என அரசுடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று வளைகுடா நாடுகளுக்கு சில தனியார் விமான சேவைகளும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

கல்வி நிறுவனங்களையும், மெட்ரோ ரயில் சேவைகளையும் துவங்க மாநிலங்கள் தயக்கம் காட்டுவதால் அதுகுறித்த அறிவிப்பு எடையும் மத்திய அரசு வெளியிடாது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் இறுதி எச்சரிக்கை விடுத்தது. வந்தே பாரத் மிஷனை நடத்துவதை தடை செய்வதாக அச்சுறுத்தியது. ஆரம்பத்தில் சர்வதேச அளவில் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே. எந்தவொரு அமெரிக்க விமான நிறுவனமும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்காததால், இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்களும் ஏர் இந்தியா மூலம் சென்றனர். சமீபத்திய தகவல்படி  இதுவரை 1,25,000 இந்தியர்கள்  விமானங்களில் நாடு திரும்பி உள்ளனர், கிட்டத்தட்ட 43,000 பேர் இந்தியாவுக்கு வெளியே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : flights , ஜூலை 1 முதல் சர்வதேச விமான சேவை தொடங்க வாய்ப்பு: முதல் கட்டமாக அமெரிக்காவுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...