பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவேங்கட புரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (56). இவர் சோழவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 வாரமாக திருமழிசை காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்தார். பணி முடிந்து நேற்று மதியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் சத்தியமூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகள்கள் உள்ளனர்.
தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சத்தியமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .பொன்னேரி பகுதியில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த துரைமுருகன் தற்கொலை செய்து கொண்டார் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி மாரடைப்பால் இறந்தார். இருவரும் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.