×

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நேற்று வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் சம்பவத்தில்  இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்த காவலர்களை பாதுகாக்கக்கூடிய முயற்சியிலேயே அரசும் நிர்வாகமும் ஈடுபடுகின்றது.  இக்கொடுமையை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர், கோட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் இன்று (26ம் தேதி) ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தனிநபர் இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து  கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும், வணிக பெருமக்களும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறோம். அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

Tags : Demonstration ,protest ,Sathankulam ,K Balakrishnan ,incident , Demonstration , protest,Sathankulam incident, K Balakrishnan announces
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...