×

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!: வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதும், இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடிப்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் தொடர்வதாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை வழிமறித்து படகுகளையும், மீனவர்களையும் தாக்க முற்பட்டனர். தொடர்ந்து, அவர்களை மீன் பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் வலைகளை அறுத்தெறிந்தும், மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீன்பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர். இதனால் எதிர்பார்த்த அளவு மீன்வரத்து இன்றி மீனவர்கள் கரை திருப்பினர். இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : fishermen ,Rameshwaram ,island ,Kachchativu , Kachchativu, Rameswaram, Fishermen, Fleet, Nets, Sri Lanka, Navy, Atrocity
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு