×

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். காய்ச்சல் முகாம்களில் இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார தூய்மைக்காக 20ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கப்டுகிறது. தூய்மை பணியாளர்களை அழைத்து செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.


Tags : Municipal Commissioner ,Prakash , Interview with Prakash, Municipal Commissioner, Chennai
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...