நெல்லை: சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி அணைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.