டெல்லி: 45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக அவசர நிலை வந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டதாக அமித்ஷா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.1975 ம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 45 வது ஆண்டையொட்டி அவர் பதிவிட்டுள்ளார்.