×

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய்: 6 ஆண்டுக்கு பிறகு தம்பியுடன் கைது

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த எஸ்தர் பேபி(30). இவர் தனது கணவரை பிரிந்து குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள பெற்றோர் அப்துல்காசர்-சகாயராணியுடன் வசித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி எஸ்தர் பேபி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை போலீசார் சகாயராணியின் தம்பி சேவியர் அருணை (40) ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. இந்த தகவல் எஸ்தர் பேபியின் தந்தை அப்துல்காசருக்கு தெரியவந்தது.

சேவியர் அருண் திருப்பூர் வந்திருந்தபோதுதான் எஸ்தர்பேபி காணாமல் போனதால் அவர் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ேசவியர் அருணை காவலில் எடுத்து வீரபாண்டி போலீசார்விசாரித்தபோது,  எஸ்தர் பேபி கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டது தெரியவந்தது. எஸ்தர் பேபியின் தாய் சகாயராணிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது எஸ்தர்பேபிக்கு தெரியவந்தது. அவர் தாயை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால், தனது தம்பி சேவியர் அருண், கள்ளக்காதலன் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி எஸ்தர் பேபியை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளனர். இந்த வழக்கில் சகாய அருண், சகாயராணியை போலீசார் கைது செய்தனர். நேற்று காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள எஸ்தர் பேபி வீட்டுக்கு சென்றனர். அவர் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்தனர். உடல் புதைக்கப்பட்டு 6 வருடங்களானதால் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன. அவற்ைற பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் சகாயராணியின் கள்ளக்காதலன் பாக்கியராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : brother , Kalikkadalan, mother, brother. Arrested
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...