சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று காங்கிரஸ் கட்சியில் பலருக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் உள்ளது உண்மைக்குப் புறம்பானது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பி.பிரவீன் ராஜ் இதை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். கட்சி விரோத செயலை செய்த பி.பிரவீன் ராஜ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.