×

கடற்படை போர்க்கப்பலில் 12 மாலுமிக்கு கொரோனா

புனே: புனே அருகே ஐஎன்எஸ் சிவாஜி போர்க்கப்பலில் 12 பயிற்சி மாலுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் லோனவாலா பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சிவாஜி போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் 157 பயிற்சி மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை உறுதி செய்துள்ளது. அதன் செய்திக்குறிப்பில், ‘கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பிய பயிற்சி மாலுமிகள் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினர். கப்பலுக்கு திரும்பிய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதில் ஒரு குழுவில் உள்ள மாலுமி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருடன் தொடர்பு கொண்ட மற்றவர்களிடமும் பரிசோதிக்கப்பட்டது. இதில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,sailor , Naval Battleship, 12 Sailor, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...