×

95,000 காசநோயாளிகள் கூடுதலாக இறப்பார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

லண்டன்: கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 95ஆயிரம் காசநோய் மரணங்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்சுல் ஆப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் சார்பில் கொரோனா நோய் பரவலினால் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் காசநோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்றானது உலகளாவிய அளவில் காசநோயை அதிகரிக்க கூடும். கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக காசநோய் காரணமாக நாள் ஒன்றுக்கு 4000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கூடுதலாக காசநோய் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றது.  

காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவானது கொரோனா வைரசை போலவே காற்றில் நீர்துளிகள் வழியாத்தான் பரவுகின்றது. சமூக விலகலை கடைப்பிடிக்கும்பட்சத்தில் காசநோய் பாதிப்பானது குறையும். எனினும் இந்த சாத்தியமான காசநோய் பரவலை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகும் 1,10,000க்கும் மேற்பட்ட கூடுதல் காசநோய் இறப்புக்கள் ஏற்படக்கூடும். கொரோனா காரணமாக சுகாதார சேவையில் ஏற்படும் மோசமான தாக்கமானது கூடுதலாக 2லட்சம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. தற்போதைய தகவல் மற்றும் இடைவெளி கடைப்பிடித்தல் நடவடிக்கைகளின் அடிப்படையில் சீனாவில் கூடுதலாக 6ஆயிரம் காசநோய் மரணங்கள் ஏற்படக்கூடும். இதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 95ஆயிரம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 13ஆயிரம் இறப்புக்களும் ஏற்படக்கூடும்.

கொரோனா நோய் தொற்று பரவுதல் காரணமாக காசநோய் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைதல், தாமதமாக நோயை கண்டறிதல் மற்றும் தாமதமாக சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஆகியவற்றின் காரணமாக இந்த உயிரிழப்புக்களானது நிகழலாம். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் சுகாதார சேவைகளை பெரிதும் பாதிக்கச்செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags : TB , 95,000 TB patients die, study trauma data
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை