×

கொரோனா தொற்று எதிரொலி: கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பது போன்று, தற்போது தமிழக அரசு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட ப்ரோப்பைலக்டிக் மருந்துகள் அடங்கிய தொகுப்பையும் வீடு வீடாக சென்று வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என தமிழக அரசு கூற இயலாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஸ் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எனவே இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு கொரோனாவை நிரந்தரமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மருந்து வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்றும், இந்த செயல் திட்டம் சிறப்பாக வெற்றிபெறும் போது, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுப்படுத்த எதுவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Kapasura ,home ,Vijayakanth ,Corona , Corona, Kapasura Drinking Water, Drugs, Vijayakanth
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...