×

பொது முடக்கம் காரணமாக நெருக்கடியில் தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் தங்க சிறப்பு ஏற்பாடு...!

சென்னை:  குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியை முடிக்கவேண்டும் என்பதால் சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கவும், தொழிலாளர்கள் தங்குவதற்கும் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக உற்பத்தியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பத்தூர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக, மாவட்ட எல்லைகளை தாண்டி வருவதில் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலை நிர்வாகிகள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மின்துறை, மருத்துவ துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன.

இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் இல்லை என்பதால் தொழிற்சாலை அருகில் உள்ள வீடுகள் மற்றும் திருமணமண்டபத்தில் ஊழியர்களை தங்க வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Factories ,crisis , General Freeze, Crisis, Factories, Workers, Special, Arrangement
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...