×

சென்னையின் 15 மண்டலங்களையும் தனது கூடாரமாக்கிய கொரோனா : இன்று மட்டும் 16 பேர் பலி; விடுவு காலத்திற்கு காத்திருக்கும் சென்னைவாசிகள்!!

சென்னை, : சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ தாண்டியது. சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 44,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 24,670 பேர் குணமடைந்துள்ளனர். 645 பேர் உயிரிழந்துள்ளனர். 18,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1201 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.23 சதவீதம், பெண்கள் 39.76 சதவீதம்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 6,607 பேர், தண்டையார்பேட்டையில் 5,355 பேர், தேனாம்பேட்டையில் 5,213 பேர், கோடம்பாக்கத்தில் 4,794 பேர், அண்ணாநகரில் 4,766 பேர், திருவிக நகரில் 3,741 பேர், அடையாறில் 2,684 பேர், வளசரவாக்கத்தில் 1,880 பேர், திருவொற்றியூரில் 1,652 பேர், அம்பத்தூரில் 1,644 பேர், மாதவரத்தில் 1,262 பேர், ஆலந்தூரில் 978 பேர், பெருங்குடியில் 899 பேர், சோழிங்கநல்லூரில் 860 பேர், மணலியில் 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஸ்டான்லியில் 3,ஓமந்தூரார் மருத்துவமனையில் 5, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Tags : Corona ,districts ,Chennai ,holidays , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...