சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.