×

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 3 சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல்

திருநின்றவூர்: ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 சூப்பர் மார்க்கெட்டுகளில் நேற்று காலை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த ஆவடி தாசில்தார் சங்கிலிரதி, திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 3 சூப்பர் மார்க்கெட்டையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Tags : Supermarkets ,Supermarket , Social Gap, 3 Supermarket, Seal
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...