×

அரிவாளால் கேக் வெட்டிய விவகாரம்; ரவுடிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் கடந்த 19ம் தேதி ஓட்டேரியை சேர்ந்த வாலிபர் ஒருவர், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய இளம் ரவுடிகள் 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் பிரியாணி மற்றும் மது விருந்துடன் பிறந்த நாள் கொண்டாடி உள்ளார். அப்போது அந்த வாலிபர் 2 அடி நீளமுள்ள அரிவாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடினார்.  இந்த விழாவில் கலந்து கொண்ட பலருக்கும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதற்கிடையே அரிவாளால் கேக் வெட்டியது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில், ஓட்டேரியை சேர்ந்த முக்கிய குற்றவாளியுடன் கேக் வெட்டிய அவரின் கூட்டாளிகளான மாம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(37), பள்ளிக்கரனையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(30), மேடவாக்கத்தை சேர்ந்த மதன்(எ)கோவிந்தன்(30), சித்தலப்பாக்கத்தை சேர்ந்த துரை ராஜ்(25), ஆனந்தன்(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஓட்டேரியை சேர்ந்த வாலிபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Tags : affair ,associates ,Rowdy ,Rice , Rowdy's allies, arrests, police web
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...