பெரம்பூர்: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் முக்கிய நிர்வாகிக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ஓட்டேரி பாஷ்யம் 2வது தெருவில் ஆயுதப்படை காவலர், பெரம்பூர் எஸ்எஸ்வி கோயில் தெருவில் கார்ப்பரேஷன் ஊழியர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உதவி கமிஷனர் பாதிப்பு: புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் எம்கேபி நகர், வியாசர்பாடி ஆகிய காவல் நிலங்களை கண்காணித்து வரும் எம்கேபி நகர் உதவி கமிஷனருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.