தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் போராட்டகுழுவுடன் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். பேச்சுவாத்தையில் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அடுத்தடுத்து தந்தை, மகன் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.