டெல்லி: பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.2000 கோடியில் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியில் எவ்வளவு வசூலானது போன்ற விவரத்தை வெளியிட மறுத்த நிலையில் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.