தூத்துக்குடி: ஆபரேஷன் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் மாலத்தீவுகளில் சிக்கி தவித்த 198 இந்தியர்களை கடற்படை கப்பல் ஏர்ராவத் சுமந்து கொண்டு இன்று தூத்துக்குடி வந்தடைந்தது. இந்நிலையில் தூத்துக்குடி வந்த அனைவரும் பரிசோதனைக்கு உட்பட்டு அவர்களில் உடைமைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.