டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,215 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,011 பேர் உயிரிழந்த நிலையில் 2,48,190 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,35,796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6283 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 67,706 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் நேற்று முன்தினம் வரை 3-வது இடத்தில் இருந்த டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 62,655 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2233 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 36,602 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 62,087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 794 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 34,112 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக விவரம்: அசாமில் 5586 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 3521 பேர் குணமடைந்தது. பீகாரில் 7825 பேருக்கு பாதிப்பு; 55 பேர் பலி; 5781 பேர் குணமடைந்தது. சண்டிகரில் 411 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 322 பேர் குணமடைந்தது. சத்தீஸ்கரில் 2303 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1513 பேர் குணமடைந்தது. கோவாவில் 864 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 152 பேர் குணமடைந்தது. குஜராத்தில் 27,825 பேருக்கு பாதிப்பு; 1684 பேர் பலி; 19,909 பேர் குணமடைந்தது. அரியானாவில் 11,025 பேருக்கு பாதிப்பு; 169 பேர் பலி; 5916 பேர் குணமடைந்தது. திரிபுராவில் 1237 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 782 பேர் குணமடைந்தது. கேரளாவில் 3310 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1749 பேர் குணமடைந்தது. ராஜஸ்தானில் 15,232 பேருக்கு பாதிப்பு; 356 பேர் பலி; 11,910 பேர் குணமடைந்தது. ஜார்கண்டில் 2137 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1469 பேர் குணமடைந்தது. லடாக்கில் 847 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 136 பேர் குணமடைந்தது. மணிப்பூரில் 898 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 250 பேர் குணமடைந்தது. மேகலாயாவில் 44 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது. மிஸ்ரோமில் 141 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது. நாகாலாந்தில் 280 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 141 பேர் குணமடைந்தது. ஒடிசாவில் 5303 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 3863 பேர் குணமடைந்தது. பாணடிச்சேரி 383 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 149 பேர் குணமடைந்தது. பாஞ்சாப்பில் 4235 பேருக்கு பாதிப்பு; 101 பேர் பலி; 2825 பேர் குணமடைந்தது. உத்தரகாண்ட்டில் 2402 பேருக்கு பாதிப்பு; 28 பேர் பலி; 1521 பேர் குணமடைந்தது. கர்நாடகாவில் 9399 பேருக்கு பாதிப்பு; 142 பேர் பலி; 5730 பேர் குணமடைந்தது. ஜம்மு காஷ்மீரில் 6088 பேருக்கு பாதிப்பு; 85 பேர் பலி; 3531 பேர் குணமடைந்தது. தெலுங்கானாவில் 8674 பேருக்கு பாதிப்பு; 217 பேர் பலி; 4005 பேர் குணமடைந்தது. மேற்கு வங்கத்தில் 14,358 பேருக்கு பாதிப்பு; 569 பேர் பலி; 8687 பேர் குணமடைந்தது. உத்தரப்பிரதேசத்தில் 18,322 பேருக்கு பாதிப்பு; 569 பேர் பலி; 11,601 பேர் குணமடைந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 9372 பேருக்கு பாதிப்பு; 111 பேர் பலி; 4495 பேர் குணமடைந்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் 139 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் 12,078 பேருக்கு பாதிப்பு; 521 பேர் பலி; 9215 பேர் குணமடைந்தது. இமாச்சலப்பிரதேசத்தில் 727 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 437 பேர் குணமடைந்தது. அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 48 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது. தாதர் நகர் ஹவேலியில் 91 பேருக்கு பாதிப்பு; 27 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை. சிக்கிமில் 78 பேருக்கு பாதிப்பு; 29 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.