தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் தந்தை ஜெயராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.