சென்னை: முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது மற்றும் முழு முடக்கம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க வாய்புள்ளது.