×

இந்தியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு; கழிவு நீரில் கொரோனா வைரஸ்: சுத்திகரித்தால் ஆபத்து இல்லை

புதுடெல்லி: கழிவுநீரில் கொரோனா வைரசின் மரபணு மூலக்கூறுகள் கலந்து இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டறிந்துள்ளனர். இதனால், கழிவு நீர் மூலம் கொரோனா பெருமளவில் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பீதி ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், காந்திநகர் ஐஐடி.யை சேர்ந்த விஞ்ஞானிகள், குஜராத் உயிரி தொழில்நுட்பம் ஆராய்ச்சி மையம், குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையை `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ என்னும் சர்வதேச இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அகமதாபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கடந்த மே 8, 27 ஆகிய தேதிகளில் சேகரித்த கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் சார்ஸ்-சிஓவி-2 வைரசின் மூலக் கூறுகளான ஓஆர்எப்ஏபி, ஓஆர்எப்ஏபி என் மற்றும் எஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

மே 8ம் தேதி கண்டறியப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட, மே 27ம் தேதி 10 மடங்கு அதிகளவு அடர்த்தி காணப்பட்டது. இவற்றை தொடர்புபடுத்தினால், அகமதாபாத்தில் மே 8ம் தேதியை விட, 27ம் தேதி கொரோனா பாதிப்பு ஏன் இரண்டு மடங்காக அதிகரித்தது என்பது உறுதியாகிறது. அதே நேரம், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் எவ்வித வைரஸ் மூலக்கூறுகளும் இல்லை. போலியோ வைரஸ், ஹெபடைடிஸ் ஏ போன்ற தொற்றுகள் பரவினாலும் இந்த சோதனை முறையின் மூலம் அவற்றை எளிதில் கண்டறிய முடியும். கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு நாளைக்கு 10.60 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வந்து அடைகிறது. இதனால், சுத்திகரிக்கப்படாத நீரில் வைரசின் மூலக்கூறுகளின் ஆர்என்ஏ.க்கள் அதிகளவில் காணப்படும். இதன் மூலம், பெருமளவிலான மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்புக்கு உலக விஞ்ஞானிகளிடம் பாராட்டு குவிந்துள்ளது.

ஒரு லிட்டர் கழிவுநீரில் 10.41 கோடி வைரஸ்கள்
* கொரோனா நோயாளிகள் பயன்படுத்தி வெளியேற்றும் ஒரு லிட்டர் கழிவு நீரில் 15 ஆயிரம் முதல் 10.41 கோடி வரையிலான வைரஸ் மூலக்கூறுகள் உருவாகின்றன.
* இத்தாலியில் முதல் கொரோனா தொற்று உறுதியாவதற்கு முன்பாக, மிலன் நகரில் உள்ள கழிவுநீரில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
* ஆஸ்திரேலியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் அதிகளவு கொரோனா வைரஸ் மூலக்கூறுகள் காணப்படுகின்றssன.
- இந்திய விஞ்ஞானிகள்

Tags : Scientists ,India , Indian, scientists discover, waste water, corona virus
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு