×

ஆந்திராவில் 3 தலைநகரம் திட்டம் நிறுத்தம்

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மாநில பஞ்சாயத்து ராஜ், சுரங்கத்துறை அமைச்சரான ராமச்சந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து, திருப்பதியில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு: ஆந்திராவில்  விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரும், கர்னூலில் நீதிமன்ற தலைநகரமும், அமராவதியில்  சட்டப்பேரவை தலைநகரமும் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசின் கணிப்பின்படி, மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் கொரானோ  பாதிப்பு 2 முதல் 3 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 3 தலைநகர திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 


Tags : capital project stop ,Andhra Pradesh , Andhra, 3 capital, project stop
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி