×

டெல்லியை தாக்க சதி

புதுடெல்லி: இந்திய - சீனா ராணுவத்துக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இருதரப்பிலும் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், சீனாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இது பற்றி உளவுத்துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை அரசுக்கு தெரிவித்து, உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றுள்ளன. அதற்கு பழிவாங்கவும் தீவிரவாதிகள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லியில் தாக்குதல்  நடத்தும் சதியில் ஈடுபட, 5க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக காவல்துறைக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Delhi , Delhi, attack plot
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு