×

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மளிகை கடைக்கு சீல்

புழல்: கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நின்றபடி பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புழல், காவாங்கரை, செங்குன்றம், பாடியநல்லூர், காந்திநகர், செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், செங்குன்றம் பஜாரில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்க சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருட்களை வாங்கி சென்றனர். இதனையடுத்து, அந்த கடைக்கு போலீசார் சென்று சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் பொருட்களை விற்பனை செய்த அந்த மளிகை கடைக்கு நேற்று காலை சீல் வைத்தனர். மேலும், அருகில் உள்ள மற்ற கடை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்க வேண்டும். அப்படி மீறினால் அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Tags : grocery store , Social space, grocery store, sealed
× RELATED மளிகை கடை கோவிலில் திருட்டு