×

சிறுவர்கள் சண்டையை விலக்கிவிட்டபோது வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து

* ஒருவர் கைது
* மற்றொருவருக்கு வலை

பொன்னேரி:  சிறுவர்கள் சண்டையை விலக்கிவிட்ட வாலிபரை சரமாரி கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு சரமாரியாக ஒருவரை ஒருவர் அடித்துக் தாக்கிக்கொண்டனர். இதற்கிடையில், அவ்வழியே வந்த அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (27) என்பவர் சிறுவர்களை தட்டிக்கேட்டதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வஞ்சிமுத்து (26) என்பவர் பாலமுருகனிடம் இதுபற்றி தட்டிக் கேட்டார். இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதன்பிறகு வீட்டுக்கு சென்ற பாலமுருகன் அவரது மைத்துனர் ராஜ் (26) என்பவரை அழைத்து வந்து வஞ்சிமுத்துவை கத்தியால் சரமாரி குத்திவிட்டு இருவரும் தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த வஞ்சிமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜுவை  கைது செய்தனர். மேலும், தலைமறைவான பாலமுருகனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : boys ,fight , The boys fight, the young man, the screaming
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு