×

வாலிபர் உட்பட மூவர் உயிரிழப்பு

அயப்பாக்கம், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் கடந்த 15ம் தேதி  காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய முதியவர், 68 வயது மூதாட்டி  கொரோனா பாதிப்பால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.


Tags : teenager , Ilapakkam, plaintiff, death
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை