×

நான் வாழும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: கவுசல்யா பேட்டி

ஊட்டி: உடுமலையில் ஆணவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா குன்னூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. சங்கரின் ரத்தத்திற்கு இது நீதியே இல்லை. அன்னலட்சுமியும், சின்னசாமியும் குற்றவாளி இல்லை என்றால், இந்நேரம் சங்கர் உயிரோடு இருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளோம். இந்த வழக்கில் எங்களுக்கான நீதியை பெறாமல் விடமாட்டோம். என்னுடைய சட்டப்போராட்டம் தொடரும். நான் உயிருடன் வாழும் வரை நீதியை பெறாமல் நான் ஓய்ந்து போக மாட்டேன். இவ்வாறு கவுசல்யா கூறினார்.

‘‘உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் சங்கரின் இறப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது,’’ என்று சங்கர் தம்பி விக்னேஷ்வரன் கூறினார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி கூறுகையில், ‘‘கடவுள் நல்ல வழியை காட்டி உள்ளார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. கடவுள் மாதிரி நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பணிந்து போகிறோம்’’ என்றார்.

Tags : law fight ,Kausalya , Law fight, Kausalya
× RELATED கடன் தொல்லையால் டீ கடைக்காரர் தற்கொலை